25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


இரண்டு விதமான தோற்றங்களில் ‘  சைரன் “படத்தில் ஜெயம் ரவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரண்டு விதமான தோற்றங்களில் ‘ சைரன் “படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருவதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. ஜெயம் ரவியின் கைதி கதாபாத்திரத்தில் ஒரு கதையும், போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கதையை விவரிக்கும் காட்சி டீசரில் உள்ளது.

பரபரப்பான திருப்பங்களுடன் மாறுபட்ட கதைக் களத்தில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகி இருக்கும் இந்த டீசர், படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி முதல் முறையாக 'சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வருகிறார்.

ஆக் ஷன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. ஜெயம்ரவி இது வரை ஏற்றிராத இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி கதையுடன் ஒன்றிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது. இசை ஜி வி.பிரகாஷ், ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News